நினைப்பதை நடக்க வைக்கும்
ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் வானபுரம் தாலுக்கா ராவுத்தநல்லூரில் எழுந்து அருள் புரியும் நினைப்பதை நடக்க வைக்கும் ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம் அமைந்துள்ள இடம். (இராவத்தநல்லூர் ஒரு ஆன்மீகம் நிறைந்த திருத்தலமாகும்) திருவண்ணாமலை TO கள்ளக்குறிச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 30 கிலோமீட்டர் தொலைவில் புதூர் கூட்ரோடு என்ற இடத்தில் பிரியக்கூடிய சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இராவத்தநல்லூர் இந்த சாலை கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள சேராப்பட்டு (இதுவும் ஒரு சுற்றுலா தலமாகும்) என்ற ஊருக்கு செல்லக்கூடிய சாலை ஆகும் திருவண்ணாமலையில் இருந்து ராவத்த நல்லூர் வருவதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆகும் கள்ளக்குறிச்சியில் இருந்து இங்கு வருவதற்கு 28 கிலோமீட்டர் (சுமார் 40 நிமிடம் ) ஆகும் தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து வசதிகள் உள்ளன மற்றும் புதூர் கூட்ரோட்டில் இருந்து இராவத்தநல்லூர் செல்வதற்கு எந்நேரமும் ஆட்டோ வசதியும் உள்ளது
கோவில் திறந்திருக்கும் நேரம்
( 7 am to 8.30pm )